Type Here to Get Search Results !

Ads

புண்ட்ர தாரணம் தொடர் - 2

மேலும், திருநீறு, காமக்கிழத்தியர் மார்பில் பூசிய சாந்துகாமுகரை வசீகரித்து இன்பந்தருதல் போல, தானும் மெய்யன்புடையாரை அவர்களிடத்தில் இன்பந்தோன்றச் செய்யும் என்று பல்லாண்டுப் பதிகம் பகர்கின்றது.
          ‘ஆன்மாக்கள் வினை நீறாகும் பொருட்டு, இறைவன் நீறணிகிறான் என்று “தொழுது எழுவார் வினைவளம் நீறெழ நீறணி அம்பலவன்” என்னும் மணிவாசகரின் திருக்கோவையார் உபதேசிக்கின்றது.
           திருநீறு பராசக்தியின் வடிவமானது. “பராவணமாவது நீறு” என்றது திருமுறை.
          திருநீறு அணிந்து கொண்டு தீயிடைப்பட்ட விறகுபோல வினையும் நோயும் வெந்து அவியும் என்று அருளுகின்றனர் அப்பர்.
           மங்கையர்க்கரசியின் வேண்டுகோளை ஏற்று கூன்பாண்டியனது வெப்பு நோயை…….
“ மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்திரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாய்மை பங்கண் திருவல வாயான் திருநீறே ”
         என்று திருப்பதிகம் பாடி திருவளர் திருநீற்றை மன்னவனின் உடலில் பூசி அவன் நோயைப் போக்கினார் திருஞானசம்மந்தர் என்பது நாடறிந்த செய்தி ஆகும்.
        சுந்தர மூர்த்தி சுவாமிகள் திருமழபாடியில் இவைனை வணங்கி இன்னிசைத திருப்பதிகம் பாடும்போது, “தலைவனே, உந்தன் திருவடியை வந்தடைந்துள்ளேன். திருநீற்றினை மெய்யில் பூசியிருக்கின்றேன். என்னையும் ஏற்று அருள்புரிக” என்று கூறுகிறார்.
        மூர்த்தி நாயனார் அரசுரிமை ஏற்குங் காலத்துத் திருநீற்றையே அபிஷேகப் பொருளாகக் கொண்டதனாலும், திருநீற்றின் பெருமை விளங்கும். கிருமிகளை அழித்து துர்நாற்றத்தைப் பசுவின் சாணம் அகற்றுவது யாவரும் அறிந்த உண்மை.
         அணுக்கதிர்களையும் எதிர்கொள்ளும் ஆற்றல் சாணத்திற்கு உண்டு. வீட்டு வாசலில் சாணந்தெளிப்பது, வீட்டை சாணத்தால் மெழுகுவது, உணவு உண்டபின் எச்சில்கிடந்த இடத்தில் சாணம் கொண்டு வநது இடுவது போன்றவை கிருமகிளை அழிக்கும் ஆற்றல் பசுஞ்சாணத்திற்கு உண்டு என்பதாலேயே ஆகும்.
         பசுஞ்சாணமின்றி வேறு சாணங்களைப் பயன்படுத்தினால் இப்பலன் கிடைக்காது.
         நமது உடலிலுள்ள துர்நாற்றங்களை அகற்ற பசுஞ்சாணத்தால் தயாரிக்கப்படும் விபூதி மிகவும் அவசியமானதாகும்.
         தலையில் உள்ள நீர் தோஷம், தலைவலி போன்றவற்றை அகற்றவும் விபூதி பயன்படுகிறது.
         சுஷுனம்னா நாடி நமது இதயத்திலிருந்து மூளைக்கு நமது நெற்றியின் வழிஅய செல்கிறது. அந்த நாடி சிறப்பான பயன்பெற பசுஞ்சாணத்தால் முறையாகத் தயாரித்த விபூதியை நெற்றியில் தரிக்க வேண்டும்.
        பசுஞ்சாண சாம்பலாகிய விபூதியை நெற்றியில் பூசும் போது, இற்த உடல் என்றாவது சாம்பலாகப் போகிறது என்ற உண்மையை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்கிறோம். இதன் மூலமே தீய எண்ணம் மனதில் இருந்து அகல்கிறது.
விபூதியின் வகைகள்
         தயாரிக்கப்படும் விதத்தைக கொண்டு விபூதியானது கற்பமெனவும், அநுகற்பமெனவும், உபகற்பமெனவும் மூன்று வகைப்படும்.
கற்பம் தயாரிக்கும் விதிமுறை
        செம்மை, வெண்மை நிறங்களும், அழகும், நற்குணங்களும் அமைந்தனவாய் சரீரம் புஷ்டியாய், பங்குனிமாத நெற்கதிர்களை மேய்ந்த பசுயின் சாணத்தை அஷ்டமி, சதுர்த்தி. பௌர்ணமி, அமாசாசை .மதலிய திதிகளில் ஏதாவது ஒரு திதியில், பசுமாட்டின் சாணம் பூமியில் விழாமல் தாமரை இலையில் சத்யோஜாத மந்திரத்தைச் சொல்லி ஏந்தி, வாமதேவ மந்திரத்தைச் சொல்லி பஞ்சகவ்யம் விட்டு, அகோர மந்திரத்தால் பிசைந்து, தத்புருஷ மந்திரத்தால் கையால் உருட்டி அல்லது சிறு சிறு வட்டுகளாகத் தட்டி வெயிலில் உலர்த்தி ஹோமம் செய்த அக்னியில் நெல்பதருடன் வைத்து ஈசாந மந்திரத்தைச் சொல்லி எடுப்பது கற்பமாம்.
அநுகற்பம்
           சித்திரை மாதத்தில் காட்டிற்குச் சென்று, அங்கு கிடைக்கும் சாணத்தை எடுத்து வந்து இடித்து கோஜலம் வார்த்து பிசைந்து உருட்டி முன் சொல்லிய மந்திரங்களின்படிச் சொல்லி விளையவைப்பது அநுகற்பம்.
உபகற்பம்

          பெரிய காடுகளில் தீப்பற்றி எரிந்து கிடக்கும் சாம்பல் பஞ்சகவ்யம் வார்த்து பிசைந்து உருட்டி, பஞ்சபிரும்ம மந்திரங்களால் ஹோம அக்னியில் விளைவித்து விபூதி உபகற்பம் எனப்படும்.
புண்ட்ர தாரணம் தொடர் - 2