Type Here to Get Search Results !

Ads

ஓர் அலைவரிசையில் அஞ்சனாதேவி வசிய மந்திரம்

              


மக்கள் தாங்கள் விரும்பும் பொருட்களைப் பார்த்து, ஆமாம் எனக்கு அது பிடித்திருக்கிறது, எனக்கு அது வேண்டும் என்று கூறுவது வழக்கம். ஆனால் அவர்கள் தாங்கள் விரும்பாத விஷயத்தைப் பார்க்கும்போதும் அதைத் தாங்களால் ஒழிக்க முடியும், தவிர்க்க முடியும்,வேரோடு கிள்ளி எறிய முடியும் என்ற மனப்பான்மையடன் அதை அணுகுவதன் மூலம், அதை விட அதிகம் இல்லாவிட்டாலும் கூட, அதே அளவு சக்தியை அதற்கு அளிக்கின்றனர், நம்முடைய சமுதாயத்தில் நாம் ஏராளமான விஷயங்களை எதிர்த்துப் போராடுவதில் திருப்தி அடைகிறோம், புற்றுநோய் ஒழிப்புத்திட்ட்ம், வறுமை ஓழிப்புத்திட்டம், போரை எதிர்த்து பேரணி, போதை பொருட்களுக்கு எதிரான சட்டம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், வன்முறைக்கு எதிரான கருத்தரங்கு, இப்படி பல. நாம் விரும்பாத எல்லாவற்றிற்கும் எதிராகப் போராடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளோம், உண்மையில் அது இன்னும் அதிகமாகப் போராடுவதற்கு வழி வகுக்கிறது.

எதை எதிர்ப்பது என்பது ஓர் அலைவரிசையின் மூலம் நமக்கு மிகவும் உறுதுணையாக நிற்பது அஞ்சனாதேவி வசிய மந்திரம்.


அருணோதயத்தில் இருளி மூலிகைக்குக் காப்புக்கட்டி சாபநிவர்த்திசெய்து, பிடுங்கிவந்து, வேரை தரித்து கிரமப்படி பூசை செய்து கீழ்கண்ட மூலமந்திரத்தை உச்சரித்து  rவேரை குளிசமாடி வைக்கவும்.

மூலமந்திரம் : 

ஓம் அஞ்சனாதேவி, ஓம் சர்வ பேதனி ஓம் பிரவஞ்சனி, ஓம் வாயுதேவி, அனுமந்தனைப் பெற்றவளே வசி வசி.


பலன் :

இந்த அஞ்சனாதேவியின் திருமந்திரத்தை எவரும் 1008 உரு 48 முதல் 97 நாள் வரை ஜெபம் பண்ணுவாராகில் அவருக்குச் சகல காரியங்களும் பிரசித்தி உண்டாகும்.


          விவேக பாரதியின் நோக்கம்  மனிதனுக்கு நல்லதை செய்ய தேவைப்படும்  எல்லா மந்திரங்களும் கற்று கொடுக்க வேண்டும் என்பதே ஆகும்.