சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நெற்றிக்கு இட்டுக் கொள்வது சிலருக்கு
அநாகரீகமாக்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள்,
நம்மவர்கள் திருநீறு, திருமண் இட்டுக் கொள்வதை “கேஸ்ட் மார்க்” (ஜாதி அடையாளம்) என்று
கெட்ட பெயர் தந்து தூக்கில் போடப் பார்த்தார்கள்.
ஆகவே, நாம்
நெற்றிக்கு இட்டுக் கொள்வது “கேஸ்ட் மார்க்” அல்ல. மாறாக அது “ரிலீஜியஸ் மார்க்” (சமயச்
சின்னம்) ஆகும்.
நெற்றிக்கு
இட்டுக் கொள்வது ஏன் ?
“ஸர்வம் நிஷ்பலம் யாதி லலாடே திலகம் வினா”
என்பது விதி. நெற்றியில் திலகம் இடாமல் செய்யப்படும் தியானம், தானம், தவம், தவஹோமம்,
தேவ பித்ரு காரியங்கள் பாவும் பயனற்றவையாகும்.
விபூதி அணிவது திருமண் அணிவது சந்தனப் பொட்டு
அணிவது முதலிய பழக்கங்கள் ஹிந்துக்களின் ஒரு முக்கிய பண்பாடு.
“நீறில்லா நெற்றிப் பாழ்” என்பது பழமொழி.
நெற்றியில் புருவ மத்தியில் மூளையின் முன்புறத்தில்
“பைனீயல் க்ளாண்ட்” என்ற ஒரு சுரப்பி உள்ளது.
யோகிகள் இதனை மூன்றாவது கண், ஞானக்கண்,
ஆக்ஞாசக்ர ஸ்தானம் எனக் குறிப்பிடுவர்.
ஞானக்கண் திறப்பது என்ற சடங்கு திபேத்தில்
லாமாக்களிடையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆன்ம ஞானத்திற்கு ஞானக்கண் திறக்க வேண்டும்.
இதை ஞாபகப்படுத்தவே பல்வேறு வகையான சமயச்சின்னங்களை நெற்றியில் அணிவர்.
பதார்த்த
விஞ்ஞானம்
·
பதார்த்த விஞ்ஞானப்படி சந்தனம் நெற்றிக்கு குளிர்ச்சியை அளிப்பது.
·
விபூதி சர்மத்தை தூய்மை செய்வது.
·
குங்குமம் மற்றும் மஞ்சள் ரத்தத்தை தூய்மைபடுத்துவது.
ஆகவே இப்பொருட்கள் நெற்றியில் அணியும் பொருட்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் நெற்றியில் திலகம் முகத்தின் அழகை பெருக்க வல்லது.
திருநீறு அணிதல்
நவநாகரீகம்
தாண்டவமாடும் இக்காலத்தில் ‘திருநீறு’ அவசியமா? அணிவதால் வரும் பயன் யாது? என்று பலர்
கேட்கிறார்கள். இதற்கு விடை கூறத் தேவையில்லை. இதன் பெயரே இதற்கு விடை தருகிறது.
‘திருநீறு’
திரு – தெய்வத்தன்மை
நீறு – வினைகளை
நீக்குவது
வினைகளை எரித்து
நீறாக்கித் தெய்வத்தன்மையை கொடுக்க வல்லதனால் அதற்கு ‘திருநீறு’ என்னும் திருநாமம்
அமைந்துள்ளது.
மேலும் அனைவருக்கும்
மேலான ஐஸ்வரியத்தைத் தரும் தகைமையுடையதால் ‘விபூதி’ எனப் பெயர் பெற்றது.
லட்சுமி வாசம்
செய்யும் பசுமாட்டின் பின்புறத்திலிருந்து வெளிப்படும் சாணம் எரிக்கப்பட்டு ‘விபூதி’
தயாரிக்கப்படுகிறது. மேலும் அனைத்து தெவதைகளும் பசுவின் உடலில் வசிக்கிறார்கள். அதனால்
அப்பசுமாட்டு சாணத்தை உலர்த்தி எரித்து தயாரிக்ப்படும் “விபூதி” செல்வத்தின் சின்னமாகும்.
‘விபூதியை’ நெற்றியில் அணிபவர்களுக்குச் செல்வத்தில் குறையிருக்காது.
‘பூதி’ என்பது
செல்வத்தின் பெயர். ‘திருநீறு’ செல்வத்தைத் தருவதாலும், செல்வமாகவே விளங்குவதாலும்
‘விபூதி’ எனப் பெயர் பெற்றது.
மேலும் அதன்
சிறப்பு நோக்கி விஷேசமான செல்வம், செல்வத்துள் செல்வம் என்ற காரணம் நோக்கி ‘விபூதி’
எனவும் வழங்கப்பெற்றது.
“திருநீறு”
தன்னை தரித்தவர்க்கு இம்மையில் ஐஸ்வரியத்தையும் அந்தமில் இன்பத்து அழிவில் வீடாகிய
முக்திப் பேற்றினையும் தருதலினால் விபூதியென்றும், ஆன்மாக்களை ரக்ஷித்தலால் ரக்ஷை என்றும்,
சிவத்துவத்தை விளக்குவதனால் பசிதம் என்றும், பாவங்களை நீக்குதலினால் பஸ்மம் என்றும்,
மலத்தை கழுவுவதால் க்ஷாரம் என்றும் பேரூர்ப் புராணம் உபதேசப் படலத்திலும், சித்தாந்த
சிகாமணியிலும் கூறுகிறது.
திருநீற்றின் பெருமை
மகுடாகமத்தில்
விபூதியை சிவமாகவே உருவகித்து ஒரு தியானம் சொல்லப்படுகிறது.
முனிவரே,
பஸ்ம தேவருடைய ஆகிருதையச் சொல்கிறேன்.
மூன்று கண்ணுடையராயும்,
மூன்று சிரசுடையராயும், மூன்று கையுடையராயும், மூன்று முகம் உடையவராகவும், அக்னி கண்ணுடையராயும்,
பஸ்மம் பூசிய சரீரமுடையராயும், செல்வத்தை மலர் போன்று நிறுத்தினராயும், இராக்ஷாமந்திர
நாயகராயும் ஆகிய பஸ்ம தேவரை மனிதன் தியனித்துச் சாந்தி அடைவானாக என்று கூறப்பெற்றுள்ளது.