Type Here to Get Search Results !

Ads

துளசியின் பெருமை

       துளசி மாடம் ஹிந்து இல்லங்களின் இன்றியமையாத ஹிந்து சின்னமாகும். ஒவ்வொரு ஹிந்துப் பெண்ணும் தனது வீட்டு முகப்பில் அல்லது பின் முற்றத்தில் உள்ள மாடத்தில் வைக்கப்பட்டுள்ள துளசிச் செடியை பூஜிப்பது அவசியம்.
துளசிக்கு ஆன்மீகப் பெருமையும். மருத்துவ மகிமையும் உண்டு.
திருமாலின் திருமார்பை அலங்கரிக்கும் புனிதம் அதற்கு உள்ளது.
பெருமாள் கோயிலிலும். ஆஞ்சநேயர் சந்நிதியிலும் துளசி தளத்தைப் ப்ரஸாதமாகக் கொடுப்பார்கள்.
அதை நாம் வாயில் போட்டு மென்று உடலில் சேர்த்து வடுவோம்.
துளசி இன்றி திருமாலுக்குச் செய்யும் ஆராதனம் நெய்யில்லாத உணவைப் போன்றது.

துளசியின் மறு பெயர்கள்
             தமிழில் திருத்துழாய் என்னும் சிறப்பு பெயர் உண்டு. சூடிய துளசிக்குப் பல பெயர்கள் உள்ளன. ஸம்ஸ்க்ருதத்தில் ஸுலபா, ஸுரஸா, வ்ருந்தா, வைஷ்ணவி, அம்ருதா, ச்யாமா, ராமா , கௌரி, பஹுமஞ்சரி ஆகியன.
ஆங்கிலத்தில் ஹாலி பேசில் அல்லது ஸக்ரட் பேசில் எனவும், லத்தீன் மொழியில் ஓசிமம் பேசில்சம் எனவும், ஜெர்மானிய மொழியில் பேசிலன் -  க்ராணட் என்றும் அழைப்பார்கள்.

               பேசில் என்ற சொல்லுக்கு தெய்வீக சக்தி என்று பொருள்.
               துளசியின் போட்டான்சியல் னநயிம் ஓஸ்லிமம் ஸாண்டம் லின்.
பசுந்துளசி (ஸ்ரீ துளசி), கருந்துளசி (க்ருஷ்ண துளசி) என்றும் இருவகை துளசிகள் பிரபலமானவை.

துளசி தோன்றிய வரலாறு
     பாரதத்தின் பெருமையையும், ஹிந்து மதத்தின் பெருமையையும் வெளிக்கொண்டு வந்தது ஹிந்து மதத்தின் சின்னமான துளசியையே சாரும். உதாரணம், செவ்வாய்க்கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா, முடியாதா என்ற ஆராய்ச்சியில் துளசியை விதைத்து, துளசி உயிர் வாழ்ந்தால் மனிதர்கள் வாழ முடியும் என்றார்கள் விஞ்ஞானிகள்.

                துளசியைப் பற்றிய புராணச் செய்தி தேவி பாகவதத்தில் உள்ளது.
திருமாலின் துணையோடு திருப்பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது அமுத கலசத்துடன் தோன்றியது துளசி என்று ‘ப்ருமம் வைவர்த்த புராணம்’ கூறுவது.

               ஸ்கந்த புராணத்தில் ‘துளசி உபாக்யானம்’ என்றே ஒரு பகுதி உள்ளது.
ஸ்ரீ பாத்ம புராணத்தில் “துளசி மஹாத்மியம்” என்று ஒரு பகுதி உள்ளது.
ஒரு சமயம் மஹாவிஷ்ணுவே துளசியை  மகிழ்விப்பதற்காக அவளை உருவகித்துப் பூஜை செய்தார் என்று ஹரிவம்சம் என்னும் நுல் கூறுகிறது.

துளசியின் ஆன்மீகப் பெருமை
         மஹாலட்சுமியின் ஸ்வருபமான துளசி இருக்குமிடத்தில் மஹாவிஷ்ணு எப்பொழுதும் வாசம் செய்கிறார்.

   துளசியினால் பூஜித்தால் 1000 பாற்குடங்களால் அபிஷேகம் செய்த திருப்தியை ஸ்ரீமஹாவிஷ்ணு அடைகிறார். அலங்காரப் பிரியனான விஷ்ணுவிற்கு - துளசி தளத்தினால் அலங்கரிப்பது மிகவும் விருப்பமானது.

  மஹாவிஷ்ணுவிற்குப் பிரியமான தளமாக விளங்கும் துளசி சிவபெருமானின் பூஜைக்கும் ஏற்றதே.

     ஹிந்துக்கள் செய்யும் எந்தப் பூஜையிலும் துளசி முக்கிய அங்கம் வகிக்கிறது.

            ஏகாதசி உபவாசம் இருப்பவர்கள் மறுநாள் துவாதசியன்று துளசி தளமும், புனித தீர்த்தமும் அருந்தி உபவாசத்தை முடிப்பதைப் புண்ணியமாகக் கருதுகிறார்கள்.
     கண்ணன் எடைக்கு நிகராகத் துளி தளத்தை துலாபாரத்தில் வைத்து, ருக்மணி சத்யபாமாவை வென்றாள். எனவே, பக்தியின் ப்ரதயக்ஷஸ்வருபம் துளசி.
     எந்த இடத்தில் துளசி செடி வளர்ந்திருக்கிறதோ. அங்கே மும்முர்த்திகளுடன் சகல தேவதைகளும் வாசம் செய்கிறார்கள்.
  
       சூரியனைக் கண்டதும் இருள் மறைவது போல், துளசியின் காற்றுப் பட்டாலே பாவங்களும், ரோகங்களும் விலகிவிடும்.

     துளசி இலையை தெய்வ ப்ரஸாதமாக உட்கொண்டவருக்கு சகல பாவங்களும் தொலையும்.

           எவனொருவன் துளசியைத் தன் தோட்டத்தில் வைத்து வளர்க்கிறானோ அவன் ஸ்ரீமஹாலட்சுமியினுடைய கடாக்ஷ்சத்திற்குப் பத்திரமாவான் என்பதில் சந்தேகமே இல்லை.‘

        பலவிதமான, பத்ர புஷ்யங்களினால் பூஜிப்பதை விட துளசி தளத்தினால் பூஜிப்பது மிகவும் நல்லது.

            எவனுடைய சரீரமானது துளசி காஷ்டத்தினால் கொளுத்தப்படுகிறதோ அவனது சகல பாவங்களும் போய்விடுகின்றன. அவன் மறுபடியும் திரும்பி வராத ஸ்தானத்தைப் பெறுகிறான்.

       துளசி மாலையை அணிந்து கொண்டு எவன் ப்ராணனை விடுகிறானோ அவனுடைய சரீர சம்பந்தமான சகல பாவங்களும் போய் விடுகின்றன.

துளசி பறித்தலும் - பூஜா பலனும்
    துளசியை நம் வீடுகளில் அழகிய மாடங்களில் வைத்து வளர்த்து சிரத்தையுடன் பூஜை செய்வது சிறப்பு.

       பெண்கள் அனுதினமும் துளசியை முறையாக பூஜை செய்து வந்தால் நல்ல கணவரை அடைவர். தீர்க்க சர்வ மாங்கல்யமும், செளபாக்யங்களும் கிடைக்கும்.

            கார்த்திகை மாதத்தில் துளசி பூஜை விஷேசமானது.
           துளசி தளங்களை எப்படி சேகரிப்பது ?

    ப்ரும்மவை வர்த்த புராணத்தின் ப்ருக்ருதி கண்டம் எனும் பகுதியில் பௌர்ணமி, அமாவாசை, துவாதசி, ஞாயிற்றுக்கிழமை, சங்கராந்தி தினம், நடுப்பகல், இரவு, சூர்யோதத்திற்கு முன்பும், தீட்டு எச்சில் உள்ள நிலையிலும் எண்ணெய் தேய்த்த உடம்புடன், விழுப்பு ஆடையுடன், ஸ்நானம் செய்யாத நிலையில் துளசி இலையைப் பறிக்கக் கூடாது.

          குளித்துவிட்டு மடியாகத்தான் துளசித் தளத்தை பறிக்க வேண்டும்.
துளசி தளத்தைப் பறிக்கும் போது (இதை வைணவர்கள் திருத்துழாய் எழுந்தருளப் பண்ணுதல் என்பார்கள்) இந்த ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.
                              “ வ்ருத்தாயை துளசி தேவ்யை
                                ப்ரியாயை கேசவஸ்யச
                                கேசவார்த்தே சினோமித்வாம்
                                 வரதா பவ ஸர்வதா ”

   “திருமாலுக்கு உகந்த ஔஷதியே, வ்ருந்தா, துளசி என்றெல்லாம் போற்றப்படும் தேவியே, உன்னை வணங்குகின்றேன்”

           ஸ்ரீமந்நாராயணனை ஆராதிக்க உன்னைத் தொழுகிறேன். எனக்கு என்றும் அருள்பாலிப்பாயாக.

          எடுத்து வைத்த துளசி முன்று நாளைக்குப் பூஜை செய்ய உபயோகப்படும். வாடினாலும் அது பரிசுத்தம், தெய்வ ஆராதனைக்கு ஏற்றது தான்.
தரையிலோ, நீரிலோ விழுந்திருந்தாலும், கோயில்களில் தெய்வ ஆராதனைக்குப் பிறகு நிர்மால்யமாக ஒதுக்கி வைத்திருந்தாலும் துளசிக்குப் தனித்தன்மை உண்டு. அதை வீட்டில் பூஜைக்குப் பயன்படுத்தலாம்.

துளசியின் மருத்துவ மகிமை
    குழந்தை முதல் பெரியோர் வரையில் அதை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

         ஆயுர்வேதத்தில் இதற்கு திவ்ய ஔஷதி என்று பெயர்.

   துளசியின் பல வகைகள் இருப்பதாக சித்தர்கள் கூறுகின்றனர். அதல் சிலவற்றை இவைகள்..

     “சூரிய ஒளிக்கு அடியில் உள்ள ஒவ்வொரு நோக்கும் அது மருந்தாகும்” என்பது சித்தர்கள் உணர்ந்தார்கள்.

       துளசியின் மருத்துவ குணங்கள் எண்ணில் அடங்காதவை. துளசி இலைகள் தினந்தோறும் மென்று தின்றால் நோயற்றவர்களாக இருக்க முடியும் என்று கூறப்படுகிறது.

    ஆயுர்வேத மருத்துவத்தில் முலிகை மருத்துவத்தில் துளசி இடம் பெறுகிறது.

            தினந்தோறும் அதிகாலையில் வெறும் வயிற்றில் 10 துளசி இலைகளை மென்று தின்பதாலோ, ஒன்றரை தேக்கரண்டி துளசி இலைச் சாற்றை அருந்துவதாலோ, இரத்தம் சுத்திகரிக்கப்படும்.

           மார்பு வலி, தொண்டை வலி, வயிற்று வலி ஆகிய கோளாறுகளிலிருந்து காப்பாற்றும்.

     கண் பார்வை குன்றிய நிலையில் உள்ள முதியவர்கள் கண்களில் நேரடியாக இரண்டு சொட்டு துளசிச்சாற்றை விட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

              தினந்தோறும் காலையில் 10 துளசி இலைகளை மென்று, ஒரு டம்ளர் நீர் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள் அகலும்.

       தினந்தோறும் 30 மில்லி துளசி இலைச் சாற்றைப் பருகினால் சில பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் கடுமையான வலியிலிருந்து நிரந்தர நிவாரணம் கிடைக்கும்.

          காது வலி, தீராத வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், சிறுநீரகம் கோளாறுகள் போன்றவற்றிற்கும் துளசி நிவாரணம் அளிக்க வல்லது.
துளசி இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் கஷாயம் வாய் துர்நாற்றத்தையும், பால்வினை நோய்களையும் முறிக்க பயன்படுத்தலாம்.
துளசி கஷாயம் மலேரியாக் காய்ச்சலுக்கு மிகச்சிறந்த மருந்தாக இருந்து வருகிறது.

              பம்பாயில் விக்டோரியா தோட்டம் உருவாக்கப்பட்ட போது அதற்காகப் பணியாற்றிய தொழிலாளர்கள் கொசுக்கடியால் மிகவும் அவதிப்பட்டார்கள். பலரை மலேரியாக் காய்ச்சல் கடுமையாகத் தாக்கியது.

          தோட்டத்தைச் சுற்றி துளசிச் செடிகள் நடப்பட்டவுடன் கொசுத் தொல்லை உடனே நீங்கியது. மலேரியாக் காய்ச்சலும் ஒழிந்தது.

        குளவி கொட்டுவது, தேள்கடி போன்ற விஷக்கடிக்கும் துளசியை அரைத்து கட்டுவது நல்லது.

       காதில் உள்ள அழுக்கு அகல - காது மந்தம் நீங்க துளசிச் சாற்றை தொட்டுச் சொட்டாக காதில் விடலாம்.

          துளசியும், மிளகும் சேர்த்து அரைத்து பல்லில் போட்டால் பல்வலி நீங்கும்.

          துளசி மணிமாலை அணிந்தால் இதய நோய் வராது. இரத்த அழுத்தம் கட்டுப்படும். இரத்தக் கொழுப்பும் கட்டுப்படுத்தப்படும்.

     ஒவ்வொரு ஹிந்துக் குடும்பமும் துளசிச் செடிகளை வளர்த்து ஆரோக்கியத்தையும், புண்ணிய பலன்களையும் பெற வேண்டும்.

                துளசி வெறும் தாவரமல்ல. அரிய சக்திகள் நிறைந்த தெய்வீக ஔஷதி என்பதை மறந்துவிடக் கூடாது.