Type Here to Get Search Results !

Ads

பிள்ளையார் சுழி

நம் தமிழ் மக்கள் எதை எழுதத் தொடங்கினாலும் ‘’உ” என்று தாளின் நடுவே மேல் பகுதியில் எழுதி, பின்னர் விஷயத்தை எழுதத் தொடங்குவர். இதனை பிள்ளையார் சுழி என்பர்.
பழங்காலத்து கல்வெட்டுக்களிலும் பழங்காலத்து ஓலைச்சுவடிகளிலும் கூட பிள்ளையார் சுழி போட்டு எழுதும் பழக்கம் இருந்திருக்கிறது.
இது எப்படி ஏற்பட்டது ? என்பதைப் பற்றி பலரும் பலவிதமாய்ச் சொல்வர்.

   சிலர் நம்முடைய எழுத்து வட்ட வடிவமானது. வட்டம் இயற்கையான வடிவம். குழந்தைகள் வட்டம் வட்டமாக எழுதுவதைப் பார்க்கிறோம்.
அதுபோல எழுதத் தொடங்குபவனும் வட்டம் இட்டான். விரைந்து எழுதும்போது வட்டத்தின் முடிவு நீளக்கோட்டில் முடியும்.
சமயமே உயிர் முச்சாய் கொண்ட நம்மவர்கள் இதற்கு பிள்ளையார் சுழி என்று பெயர் சூட்டினார்கள் என்பர்.
வேறுசிலர் வட்டமும் கோடுமான இருவடிவங்களையும் எழுத இந்த எழுதுகோல் பயன்படுமா என்று சோதித்துப் பார்த்தார்கள். அதற்காக சுழித்து இழுத்தார்கள்.
தொடங்கிய எதனையும். தொடங்கும் எதனையும் பிள்ளையாருடன் சேர்த்துவிடும் பெருந்தகையாளர்கள் இதனைப் பிள்ளையார் சுழி என்றனர்.
ஓங்காரம்
இன்னும் சிலர் ஓம் என்பது முதல் எழுத்து இதனை விரைந்து எழுதும் போது உ என்று வரும்.
தமிழ் மக்களாகிய நம்மவர் எழுத்துக்களெல்லாம் தாயாகிய ப்ரணவ வடிவத்தை முன்னெழுதியே ஏனையவற்றை பின்னர் எழுதினர்.
இந்த ப்ரணவம் பிள்ளையார் வடிவம் ப்ரணவத்தின் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி என்று கூறுவர்.
ப்ரணவம் ஐந்து எழுத்துக்களின் கூட்டம். முதல் உரு நக்ஷத்திர வடிவு அதாவது வட்டப் புள்ளி.
இரண்டாம் வடிவு தண்டம் போலப் படுக்கையில் கிடக்கும் நேர்கோடு.
முன்றாம் உரு ‘வட்டம்’
நான்காம் உரு ‘பிறைமதி’
ஐந்தாம் உரு ‘பிந்து’
இவற்றுள் வட்டப் புள்ளியும் நேர்கோடும் இணைந்து பிள்ளையார் சுழி ஆகிறது.
இந்த சுழியை இட்டாலே போதும் பிள்ளையார் வணக்கம் ஆகிவிடுகிறது.
ப்ரணவத்தின் ஐந்து கூறுகளுக்கும் உரிய அதிதேவதைகள் இருக்கிறார்கள். அவர்களை இன்னார் என்று கூற வந்த சிவஞான போதம் அகரத்திற்கு ப்ரம்மனையும், உகரத்திற்கு திருமாலையும். மகரத்திற்கு ருத்ரனையும். பிந்துவிற்கு மஹேசனையும். நாதத்திற்கு சதாசிவனையும் கூறிற்று.
எழுதத் தொடங்குவது என்பது இலக்கிய ச்ருஷ்டி. அதனால் இலக்கியம் தோன்றவும், நின்று நிலவவும், வளர்ச்சி பெறவும் ஐந்து தெய்வங்களையும் வணங்கும் முகத்தான் பிள்ளையார் சுழியை இடுகிறோம்.

                   சுழலும் சக்தி

வளைசலும் நேர்கோடுமாக இருக்கிற பிள்ளையார் சுழியிலும் நிறைய தத்துவார்த்தம் இருக்கிறது.
சக்கராகாரமாக எந்த ஒன்று சுற்றினாலும் அதற்கு மத்தியில் ஆதாரமாக அச்சாக நேராக ஒன்று இருந்தாக வேண்டும். விஷ்ணு தன் விரலையே நேராக நிமிர்த்திக் கொண்டு அதிலேதான் சக்ராயுதத்தைக் கோர்த்துக் கொண்டு சுற்றுகிறதாகவே விக்ரஹங்களில் காட்டி இருக்கிறது.
யுனிவெர்ஸில் லோகங்கள் எல்லாம் ஸர்க்குலராகத்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. இவற்றுக்குக் கூட நேர்கோடாக ஓர் ஆதார அச்சு நம் கண்ணுக்கு தெரியாவிட்டாலும் சக்தி ருபத்தில் இருக்கத்தான் வேண்டும்.
வட்டமாகச் சுற்றுகிற சகலப் பிரபஞ்சத்தையும் அதற்கு ஆதாரமான சக்தியையும் சேர்த்துதான் பிள்ளையார் சுழியில் வட்டமாகவும், நேர்கோட்டுப்பாகமாகவும் போடுகிறோம்.

    Energy உண்டாவதே பிள்ளையார் சுழி ருபத்தில் தான்.
தாரை கொட்டி அதிலிருந்து Electricity எடுக்கிற போது Rotation லிருந்து (வட்டத்திலிருந்து) நேர்கோடாகத் தான் மின்சாரம் புறப்படுகிறது.
பிள்ளையார் சுழியில் கொம்பு தான் Rotation கோடு அதிலிருந்து சக்தி உத்பவம். இந்த இரண்டையும் சிவ - சக்தி ஸ்வருபமான நாத பிந்துக்களாகக் கூடச் சொல்லிக் கொண்டு போகலாம். அதெல்லாம் சூஷ்மமான விஷயம்.

    ஆரம்பித்த இடத்துக்கே வந்து முடிந்து விடுகின்ற வட்டம் ஏகமான ப்ருமத்தைக் குறிப்பாகக் கொள்ளலாம். வட்டத்தில் ஆரம்பித்து அரைவட்டத்ததிற்கப்புறம் நேர்கோடாகிற பிள்ளையார்சுழி, ஏகமான ப்ருமத்தைச் சங்கேதமாகக் காட்டிவிட்டு அதிலிருந்து அநேகமான ச்ருஷ்டி தோன்றியதையும் சேர்த்து தெரிவிக்கிறது என்று சொல்லலாம்.
ப்ரும்மமும் பூர்ணம். ப்ரபஞ்சமும் பூர்ணம், ப்ரும்ம பூர்ணத்திலிருந்தே, ப்ரபஞ்ச பூர்ணம் உண்டாயிற்று என்று உபநிஷத்தின் ஆரம்பத்தில் சொல்கிறோம்.
ஆரம்ப சுவாமியின் அடையாளமாக எதன் ஆரம்பத்திலும் போடும் பிள்ளையார் சுழி ப்ரும்ம பூர்ணத்தை வளைசல் கொம்பாலும் ப்ரபஞ்ச பூர்ணத்தை நேர்கோட்டாலும் காட்டி. முதலில் கொம்பு அப்புறம் கோடு என்பதால் ப்ரும்மத்திலிருந்து தான் ப்ரபஞ்சம் உண்டாயிற்று என்றும் தெரிவிக்கிறது.
நாத விந்து
ப்ரணவ ஸ்வருபமே
பிள்ளையார் சுழி. ‘ப்ர’ என்றால் விசேஷமானது.
‘நவம்’ என்றால் புதுமை.
அனுபவிக்க அனுபவிக்க புதுப்புது விசேஷ உண்மைகளை உணர்த்துவது ப்ரணவம்.
பராசக்தியின் ஆயிரத்தில் ஒரு பங்கு ஆதிசக்தி. அதன் ஆயிரத்தில் ஒரு பங்கு ஞான சக்தயாகப் பிரிந்தது. இதனுள் இருந்து ஆயிரத்தில் ஒரு பங்காக பிரிந்தது க்ரியா சக்தி. இதுதான் உலகை இயக்குவது. இதனுள் ஆயிரத்தில் ஒரு பங்காக பிரிந்தது இச்சா சக்தி.
இச்சா சக்தியான அருள் வீழ்ச்சி விந்து என்ற சுத்தமாயையில் விழ அது சுழன்றது.
நீர் வீழ்ச்சியானது சக்கரத்தில் விழுந்தவுடன் அது சுழன்று மின்சாரம் உண்டாவது போல் குடிலா சக்தி பிறந்தது.
வட்டமான விந்திலிருந்து நேரான ஒரு சக்தி பிறந்ததைக் குறிக்கும் முகமாகவே சுழியுடன் கோடு சேர்த்து உ என்று ப்ரணவப் பொருளாகிய பிள்ளையார் சுழி இடுகிறோம்.
குடிலையின் வடிவமே ஒம். குடிலை விந்துவின் சுழற்சியிலிருந்து நேராக பிறந்தபோது அதிலிருந்தே நாதம் உண்டாயிற்று.
அதாவது இறைவனது அருள் வீழ்ச்சியானது சுத்த மாயையில் விழும் போது அது சுழலத் தொடங்குகிறது.
அப்போது பிறந்து குடிலையிலிருந்து முத்தொழில் புரியும் மும்முர்த்திகள் தோன்றுகிறார்கள்.

    விந்து சுழன்று, நாதம் நேராகத் தோன்றியது. இதுவே சுழியும் கோடும் சேர்த்து உ என்று முதலில் எழுதுகின்ற பிள்ளையார் சுழி.
பராசக்தியிலிருந்து குடிலா சக்தி வரை மொத்தம் ஆறு சக்திகள் உள்ளன. இந்த ஆறு சக்திகளே முருகப் பெருமானின் ஆறு முகங்கள்.
மயில் தோகையை விரித்து ஆடும்போது தோகையில் ஆரம்பித்து கால் நுனி வரை பார்ப்போமானால் ஓம் என்று தெரியும். 

               நாதஸ்வ ருபிணி

     மந்திரங்கள் எல்லாவற்றிற்கும் முலமாக இருப்பத ப்ரணவம். அதிலிருந்து தான் இந்த நாம ருபப் ப்ரபஞ்சம் முழுக்க வந்தது.
நாதஸ்வருபிணியான அம்பாளே ஓங்காரமாகிய அந்த ப்ரணவமும் ஆவாள்.அ, உ, ம முன்றும் சேர்ந்து ஓம் என்று ஆகிறது.
அ – ச்ருஷ்டி , உ – பரிபாலனம் , ம – ஸம்ஹாரம் என்பார்கள். அதனால் முத்தொழிலும் செய்யும் முலசக்தியே ப்ரணவம்.