Type Here to Get Search Results !

Ads

வீடு கட்டும் போது பின்பற்ற வேண்டிய வாஸ்து முறைகள் என்ன?

         
 

    வீடு கட்டுவதற்கு முன் கவனிக்க வேண்டிய சாஸ்திர முறைகள். மனையை தேர்ந்தெடுப்பது முதல் அஸ்திவாரம் போடுவதற்கு முன்பு வரை செய்ய வேண்டிய முக்கிய முறைகள் என்ன?

மனையை தேர்ந்தெடுப்பது எப்படி?

               தற்போது குடியிருக்கும் வீடு அல்லது தொழில் புரியும் இடத்திலிருந்து வடகிழக்கு திசையில் வரும் சதுர அல்லது செவ்வக வடிவ மனையை தேர்ந்தெடுக்க வேண்டும். மனை செவ்வக வடிவில் இருந்தால் அதன் நீளம் அகலத்தை விட இருமடங்குகளுக்கு மேல் இருப்பது தவறு.

               குடியிருக்கும் வீட்டிலிருந்து வடகிழக்கு தவிர வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளில் புதுவீடுகட்ட மனையை தேர்ந்தெருப்பது ஒரு ஆண்டு காலத்திற்கு நற்பலன்களை உணர முடியும்.

               முக்கோண வடிவில் உள்ள மனையை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மனையின் வடகிழக்கு மூலை சற்று நீண்டிருப்பது போலும், தென்மேற்கு மூலை சரியான 90 டிகிரி நேர்கோட்டில் அமைந்திருப்பது போலும்., வடமேற்கு மற்றும் தென்கிழக்கு மூலைகள் சற்று வெட்டுபட்டிருப்பது போலும், மனையில் கிணறு அமைந்திருந்தால் அது வடகிழக்கு மூலையில் இருப்பது அவசியம்.

           மனையில் பெரிய மரங்கள், செடி கொடிகள் அமைந்திருந்தால் எடை மற்றும் உயரம் என்ற அடிப்படையில் தென்மேற்கில் அதிக எடை மற்றும் உயரமான மரங்களும், இதற்கடுத்து தென்கிழக்கு வடமேற்கு என எடை மற்றும் உயரம் குறைந்து கொண்டே வர வேண்டும். இல்லையெனில் குறிப்பிட்ட மரங்களை அகற்றுவது அவசியம். வடகிழக்கு மூலை மரங்கள் ஏதுமில்லாமல் காலியாக இருப்பது அவசியம்.

          மனைக்கு மிக அருகாமையில் மலையோ, பெரிய மேடோ அமைந்திருந்தால் அது தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் இருப்பது விஷேச பலன்களை அளிக்கும். வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் மனை அமைந்திருக்கும் பட்சத்தில் அம்மனையை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மாறாக மனைக்கு வடக்கு பக்கம் பள்ளமோ, ஆறோ, குளமோ இருப்பது மிகச்சிறந்த பலன்களை அளிக்கும்.

தெருக்குத்து

          தெருக்குத்து என்றாலே அது மிகவும் தீய பலன்களை அளிக்கும் என்று தவறான கருத்து பரவலாக இருக்கிறது. சிலர் மனைக்கு தெருக்குத்து வரும் இடத்தில் சாலைக்கு நேர் எதிராக விநாயகர் சிலை மற்றும் பிற தெய்வங்களின் தாக்கம் நம்மை தாககாது என்று பலர் எண்ணுகின்றனர்.  சிலைகளை வைப்பதற்கும், வாஸ்து சாஸ்திரத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மேலும் சிலைகள் வைத்திருந்தால் கோயிலைப் போன்றே சில பூஜைகளையும், சம்பிரதாயங்களையும் கடைபிடிக்க வேண்டியிருக்கும். இதை கடைபிடிக்காவிட்டால் தோஷங்கள் ஏற்படும். இவ்வாறு தெருக்குத்திற்கு எதிராக சிலையை வைத்திருப்பவர்கள் அருகாமையிலுள்ள கோயிலுக்கு அளித்துவிடுவது நல்லது.


          வடகிழக்கின் கிழக்கு மற்றும் வடக்கு, வடமேற்கின் மேற்கு மற்றும் தென்கிழக்கின் தெற்கு ஆகிய இடங்களில் மனைக்கு தெருக்குத்து இருப்பது மிகுந்த நற்பலன்களை அளிக்கும். தென்மேற்கின் தெற்கு  மற்றும் மேற்கு, தென்கிழக்கின் கிழக்கு, வடமேற்கின் வடக்கு ஆகிய இடங்களில் மனைக்கு தெருக்குத்து இருப்பது மிகவும் தீயபலன்களை ஏற்படுத்தும். வீடு மற்றும் தொழில் புரியும் இடம் அமைந்திருக்கும் சாலையானது வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் போக தாழ்வாகவும், தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் மேடாகவும் இருப்பது ஆரோக்கியத்தையும், அதிர்ஷ்டத்தையும் அள்ளித் தரும்.