Type Here to Get Search Results !

Ads

ராமாயணம் யார் ? எவர் ?



அகல்யை        - ராமரின் அருளால் சாபம் நீங்கப் பெற்றவள்
அகஸ்தியர்            - மாமுனி, வனத்தில் வாழ்ந்தவர், ராமனுக்கு
                     ‘ஆதித்யஹிருதயம்’ உபதேசித்தவர்
அகம்பனன்            - ஜனஸ்தானத்தில் ராமனின் அம்பினால்
                     சாகாமல் தப்பிப் பிழைத்தவன், ராவணனிடம் ராமனைப்
                     பற்றி கோள் சொன்னவன்
அங்கதன்        - வாலி – தாரையின் மகன், கிஷ்கிந்தையின் இளவரசன்,
                     சீதையைத் தேடத் தென்திசை சென்ற வானரப்படையின்
                     தலைவன், ராமனின் துதனாக ராவணனின் அவைக்குச்
                     சென்றவன்
அத்ரி            - முனிவர், அனசூயையின் கணவர், வனத்தில்
                     வாழ்ந்தவர்
இந்திரஜித்       - ராவணனின் மகன், லட்சுமணன் கையால் போரில்
                     மாண்டான், மேகநாதன் என்றும் பெயர் உண்டு
கரன், துஷணன் - ராவணனின் தம்பிகள், ஜனஸ்தானத்துக்கு இவர்கள்
                     பொறுப்பாளர்கள், ராமன் கையால் மாண்டார்கள்
கபந்தன்         - தலையும், காலும் அற்றவன், ராமனால் வதைக்கபட்ட
                     அரக்கன், கந்தர்வ வடிவத்தைத் திரும்பப் பெற்று
                     ராமலட்சுமணர்கள் கிஷ்கிந்தை செல்ல
                     வழிகாட்டியவன்
குகன்            - வேடர் தலைவன், படகோட்டி, சிருங்கிவேரபுரம் அவன்
                     தலைநகரம்
கும்பகர்ணன்    - ராவணனின் தம்பி, எப்போதும் பெரும் துக்கம்
                     துங்குபவன்
கும்பன்          - கும்பகர்ணனின் மகன்
குசத்வஜன்      - ஜனகனின் தம்பி, மாண்டலி, சுருதகீர்த்தி ஆகியோரின்
                     தந்தை, பரத சத்ருக்னனின் மாமனார்
கௌசல்யா,
கைகேயி,
சுமித்திரை       - தசரதனின் மனைவியருள் தலையாயவர்கள்
கௌதமர்        - ரிஷி, அகல்யையின் கணவர்
சதானந்தர்       - அகல்யை – கௌதமரின் மகன், ஜனகரின் புரோகிதன்
சம்பராசுரன்     - இவனுக்கும், தேவர்களுக்கும் நடந்த போரில், தசரதன்
                     தேவர்களுக்கு உதவினான்
சரபங்கன்        - தவ முனி, வனத்தில் வாழ்ந்தவர்
சபரி             - மதங்கரின் மாணவி, ஆன்மீகத்தில் பெருநிலை
                     பெற்றவள், ராமனை தரிசித்தவள்
சதபலி           - வடக்குத் திசையில் சீதையைத் தேடிச் சென்றவன்
சம்பாதி          - கழுகரசன் ஜடாயுவின் அண்ணன், சீதையைக் காண
                     அங்கதனின் படைக்கு உதவியவன்
சீதையின் வேறு
பெயர்கள்        - ஜானகி, வைதேகி, ஜனகநந்தினி, ஜனககுமாரி, மைதிலி
சுமந்திரன்       - தசரதனின் மந்திரி, தேரோட்டி
சுக்ரீவன்        - வாலியின் தம்பி, கிஷ்கிந்தை மன்னன்,
                     சூரியபகவானின் அருளால் பிறந்தவன்
சுதீக்ஷ்ணர்       - தவமுனி, வனத்தில் வாழ்ந்தவர்
சுஷேணன்       - வானர மருத்துவன், மேற்கு திசையில் சீதையைத்
                     தேடச் சென்ற வானரப்படையின் தலைவன்
சூர்ப்பனகை     - ராவணனின் தங்கை, விதவை
தசரதன்          - ராமனின் தந்தை
ததிமுகன்        - சுக்ரீவனின் தாய்மாமன், மதுவனத்தைக் காப்பவன்
தாடகை         - காமாஸ்ரமத்தை அடுத்த காட்டில் வசித்த அரக்கி,
                     ராமன் இவளை வதம் செய்தான்
தாரை            - வாலியின் மனைவி, அங்கதனின் தாய், அறிவில்
                     சிறந்த வானர ராணி
தான்யமாலினி  - ராவணனின் இளைய மனைவி
திரிஜடா         - அரக்கிகளுள் நல்லவள், சீதைக்கு நம்பிக்கை
                     ஊட்டியவள்
திரிசரஸ்         - கரனின் சேனாதிபதி
நளன்            - பொறியியல் அறிந்த வானரவீரன், கடலின் மீது
                     இலங்கைக்குப் பாலம் கட்டியவன்
நாரதர்           - முனிவர், பிரம்மாவின் மனத்தில் பிறந்தவர்
நிகும்பன்        - கும்பகர்ணனின் மகன்
நீலன்            - வானர சேனாதிபிபதி, அக்னி தேவனின் அருளால்
                     பிறந்தவன்
பரசுராமன்       - விஷ்ணுவின் அவதாரம், ஜமதக்னியின் மகன்
பரத்வாஜர்       - பிரயாகை அருகே ஆசிரமம் அமைத்திருந்த முனிவர்
பரதன்           - தசரதனின் மகன், கைகேயியின் புத்திரன்
மந்தரை         - கூனி, கைகேயியுடன் கேகய நாட்டிலிருந்து அயோத்தி
                     வந்த தனி வேலைக்காரி
மதங்கர்         - தவமுனி, வனத்தில் வாழ்ந்தவர்
மண்டோதரி     - மயனின் மகள், ராவணனின் மனைவி, பட்டத்து ராணி,
                     இந்திரஜித்தின் தாய்
மாரீசன், சுபாகு - தாடகையின் மகன்கள், ராமனால் வதம் செய்யப்
                     பட்டவர்கள், மாரீசன் மாய மானாக வந்தவன்
மால்யவான்     - ராவணனின் தாய்வழிப்பட்டவன்
மாதலி           - இந்திரனின் தேரோட்டி
யுதாஜித்         - கேகய நாட்டு இளவரசன், கைகேயியின் தம்பி,
                     பரதனின் தாய் மாமன்
ராவணன்        - விச்ரவாவின் மகன், குபேரனின் தம்பி, புலஸ்தியனின்
                     பேரன்
ராமன்           - ராமாயணத்தின் கதாநாயகன், ராகவன், காகுத்தன்
ரிஷ்யசிருங்கர்  - புத்திரகாமேஷ்டியாகம் செய்த முனிவர்
ருமை            - சுக்ரீவனின் மனைவி, வாலி இவளைக் கவர்ந்து
                     கொண்டான்
லட்சுமணன்     - ராமானுஜன், சுமித்திரையின் மகன், ராமனின் தம்பி
லங்கா தேவி    - இலங்கையின் காவல் தெய்வம்
வசிஷ்டர்        - தசரதரின் குலகுரு, அருந்ததியின் கணவர்,
                    (மார்க்கண்டேயர், மௌதகல்யர், வாமதேவர், காசியப்பர்,
                     காத்தியாயனர், கௌதமர், ஜாபாலி ஆகியோர் மற்ற
                     குருமார்கள்)
வருணன்        - கடல் அரசன், தன் மீது அணைகட்ட ராமனை
                     அனுமதித்தான்
வால்மீகி        - ராமாயணத்தை எழுதிய ஆதிகவி, ரத்தினாகரன் என்ற
                     வழிப்பறிக் கொள்ளைக்காரனாக இருந்து தவம் புரிந்து
                     மகரிஷி ஆனவர், குசலவனுக்கு ராமாயணம்
                     போதித்தவர், சீதைக்கு அடைக்கலம் அளித்தவர்
வாலி            - இந்திரனின் அருளால் பிறந்த வானர வேந்தன்
விஸ்வாமித்திரர் - பிரம்மரிஷி, ராமனுக்கு அஸ்திரவித்தை போதித்தவர்,
                     சீதாராமன் திருமணத்துக்குக் காரணமானவர்
விராதன்         - தண்டகவனத்தில் வாழ்ந்த ராக்ஷசன், முற்பிறவியில்
                     ஒரு கந்தர்வன், ராமனால் சாபம் தீர்ந்தவன்
விபீஷணன்      - ராவணனின் தம்பி, ராமனிடம் சரண் புகுந்தவன்
வினதன்         - கிழக்குத்திசையில் சீதையைத் தேடிச் சென்றவன்
ஜடாயு           - கழுகரசன் சம்பாதியின் தம்பி, தசரதனின் தோழன்,
                     சீதைக்காக ராவணனுடன் போராடி உயிர் நீத்தவன்
ஜனகர்           - சீதையின் தந்தை, ஊர்மிளைக்கும் தந்தை
ஜாம்பவான்      - கரடி வேந்தன், பிரம்மாவின் அருள் பெற்றுப்
                     பிறந்தவன்
ஹனுமான்      - அஞ்சனை என்ற தாய்க்கும், கேசரி என்ற தந்தைக்கும்,
                     வாயு பகவான் அருளால் பிறந்தவன், ஆஞ்சநேயன்,
                     மாருதி, வாயுகுமாரன் என்பவை அவன் வேறு
                     பெயர்கள்
ஸ்வயம் பிரபை - குகையில் வாழ்ந்த தபஸ்வினி, குரங்குப்
                    படையினருக்கு உணவிட்டவள்