அகல்யை - ராமரின் அருளால் சாபம் நீங்கப் பெற்றவள்
அகஸ்தியர் -
மாமுனி, வனத்தில் வாழ்ந்தவர், ராமனுக்கு
‘ஆதித்யஹிருதயம்’ உபதேசித்தவர்
அகம்பனன் -
ஜனஸ்தானத்தில் ராமனின் அம்பினால்
சாகாமல் தப்பிப் பிழைத்தவன், ராவணனிடம் ராமனைப்
பற்றி கோள் சொன்னவன்
அங்கதன் - வாலி
– தாரையின் மகன், கிஷ்கிந்தையின் இளவரசன்,
சீதையைத் தேடத் தென்திசை சென்ற வானரப்படையின்
தலைவன், ராமனின் துதனாக ராவணனின் அவைக்குச்
சென்றவன்
அத்ரி - முனிவர்,
அனசூயையின் கணவர், வனத்தில்
வாழ்ந்தவர்
இந்திரஜித் - ராவணனின்
மகன், லட்சுமணன் கையால் போரில்
மாண்டான், மேகநாதன் என்றும் பெயர் உண்டு
கரன், துஷணன் - ராவணனின்
தம்பிகள், ஜனஸ்தானத்துக்கு இவர்கள்
பொறுப்பாளர்கள், ராமன் கையால் மாண்டார்கள்
கபந்தன் - தலையும்,
காலும் அற்றவன், ராமனால் வதைக்கபட்ட
அரக்கன், கந்தர்வ வடிவத்தைத் திரும்பப் பெற்று
ராமலட்சுமணர்கள் கிஷ்கிந்தை செல்ல
வழிகாட்டியவன்
குகன் - வேடர்
தலைவன், படகோட்டி, சிருங்கிவேரபுரம் அவன்
தலைநகரம்
கும்பகர்ணன் - ராவணனின்
தம்பி, எப்போதும் பெரும் துக்கம்
துங்குபவன்
கும்பன் - கும்பகர்ணனின்
மகன்
குசத்வஜன் - ஜனகனின்
தம்பி, மாண்டலி, சுருதகீர்த்தி ஆகியோரின்
தந்தை, பரத சத்ருக்னனின் மாமனார்
கௌசல்யா,
கைகேயி,
சுமித்திரை - தசரதனின்
மனைவியருள் தலையாயவர்கள்
கௌதமர் - ரிஷி,
அகல்யையின் கணவர்
சதானந்தர் - அகல்யை
– கௌதமரின் மகன், ஜனகரின் புரோகிதன்
சம்பராசுரன் - இவனுக்கும்,
தேவர்களுக்கும் நடந்த போரில், தசரதன்
தேவர்களுக்கு உதவினான்
சரபங்கன் - தவ
முனி, வனத்தில் வாழ்ந்தவர்
சபரி - மதங்கரின்
மாணவி, ஆன்மீகத்தில் பெருநிலை
பெற்றவள், ராமனை தரிசித்தவள்
சதபலி - வடக்குத்
திசையில் சீதையைத் தேடிச் சென்றவன்
சம்பாதி - கழுகரசன்
ஜடாயுவின் அண்ணன், சீதையைக் காண
அங்கதனின் படைக்கு உதவியவன்
சீதையின் வேறு
பெயர்கள் - ஜானகி,
வைதேகி, ஜனகநந்தினி, ஜனககுமாரி, மைதிலி
சுமந்திரன் - தசரதனின்
மந்திரி, தேரோட்டி
சுக்ரீவன் - வாலியின் தம்பி, கிஷ்கிந்தை மன்னன்,
சூரியபகவானின் அருளால் பிறந்தவன்
சுதீக்ஷ்ணர் - தவமுனி,
வனத்தில் வாழ்ந்தவர்
சுஷேணன் - வானர
மருத்துவன், மேற்கு திசையில் சீதையைத்
தேடச் சென்ற வானரப்படையின் தலைவன்
சூர்ப்பனகை - ராவணனின்
தங்கை, விதவை
தசரதன் - ராமனின்
தந்தை
ததிமுகன் - சுக்ரீவனின்
தாய்மாமன், மதுவனத்தைக் காப்பவன்
தாடகை - காமாஸ்ரமத்தை
அடுத்த காட்டில் வசித்த அரக்கி,
ராமன் இவளை வதம் செய்தான்
தாரை - வாலியின்
மனைவி, அங்கதனின் தாய், அறிவில்
சிறந்த வானர ராணி
தான்யமாலினி - ராவணனின்
இளைய மனைவி
திரிஜடா - அரக்கிகளுள்
நல்லவள், சீதைக்கு நம்பிக்கை
ஊட்டியவள்
திரிசரஸ் - கரனின்
சேனாதிபதி
நளன் - பொறியியல்
அறிந்த வானரவீரன், கடலின் மீது
இலங்கைக்குப் பாலம் கட்டியவன்
நாரதர் - முனிவர்,
பிரம்மாவின் மனத்தில் பிறந்தவர்
நிகும்பன் - கும்பகர்ணனின்
மகன்
நீலன் - வானர
சேனாதிபிபதி, அக்னி தேவனின் அருளால்
பிறந்தவன்
பரசுராமன் - விஷ்ணுவின்
அவதாரம், ஜமதக்னியின் மகன்
பரத்வாஜர் - பிரயாகை
அருகே ஆசிரமம் அமைத்திருந்த முனிவர்
பரதன் - தசரதனின்
மகன், கைகேயியின் புத்திரன்
மந்தரை - கூனி,
கைகேயியுடன் கேகய நாட்டிலிருந்து அயோத்தி
வந்த தனி வேலைக்காரி
மதங்கர் - தவமுனி,
வனத்தில் வாழ்ந்தவர்
மண்டோதரி - மயனின்
மகள், ராவணனின் மனைவி, பட்டத்து ராணி,
இந்திரஜித்தின் தாய்
மாரீசன், சுபாகு - தாடகையின்
மகன்கள், ராமனால் வதம் செய்யப்
பட்டவர்கள், மாரீசன் மாய மானாக வந்தவன்
மால்யவான் - ராவணனின்
தாய்வழிப்பட்டவன்
மாதலி - இந்திரனின்
தேரோட்டி
யுதாஜித் - கேகய
நாட்டு இளவரசன், கைகேயியின் தம்பி,
பரதனின் தாய் மாமன்
ராவணன் - விச்ரவாவின்
மகன், குபேரனின் தம்பி, புலஸ்தியனின்
பேரன்
ராமன் - ராமாயணத்தின்
கதாநாயகன், ராகவன், காகுத்தன்
ரிஷ்யசிருங்கர் - புத்திரகாமேஷ்டியாகம்
செய்த முனிவர்
ருமை - சுக்ரீவனின்
மனைவி, வாலி இவளைக் கவர்ந்து
கொண்டான்
லட்சுமணன் - ராமானுஜன்,
சுமித்திரையின் மகன், ராமனின் தம்பி
லங்கா தேவி - இலங்கையின்
காவல் தெய்வம்
வசிஷ்டர் - தசரதரின்
குலகுரு, அருந்ததியின் கணவர்,
(மார்க்கண்டேயர், மௌதகல்யர், வாமதேவர், காசியப்பர்,
காத்தியாயனர், கௌதமர், ஜாபாலி ஆகியோர் மற்ற
குருமார்கள்)
வருணன் - கடல்
அரசன், தன் மீது அணைகட்ட ராமனை
அனுமதித்தான்
வால்மீகி - ராமாயணத்தை
எழுதிய ஆதிகவி, ரத்தினாகரன் என்ற
வழிப்பறிக் கொள்ளைக்காரனாக இருந்து தவம் புரிந்து
மகரிஷி ஆனவர், குசலவனுக்கு ராமாயணம்
போதித்தவர், சீதைக்கு அடைக்கலம் அளித்தவர்
வாலி - இந்திரனின்
அருளால் பிறந்த வானர வேந்தன்
விஸ்வாமித்திரர் - பிரம்மரிஷி,
ராமனுக்கு அஸ்திரவித்தை போதித்தவர்,
சீதாராமன் திருமணத்துக்குக் காரணமானவர்
விராதன் - தண்டகவனத்தில்
வாழ்ந்த ராக்ஷசன், முற்பிறவியில்
ஒரு கந்தர்வன், ராமனால் சாபம் தீர்ந்தவன்
விபீஷணன் - ராவணனின்
தம்பி, ராமனிடம் சரண் புகுந்தவன்
வினதன் - கிழக்குத்திசையில்
சீதையைத் தேடிச் சென்றவன்
ஜடாயு - கழுகரசன்
சம்பாதியின் தம்பி, தசரதனின் தோழன்,
சீதைக்காக ராவணனுடன் போராடி உயிர் நீத்தவன்
ஜனகர் - சீதையின்
தந்தை, ஊர்மிளைக்கும் தந்தை
ஜாம்பவான் - கரடி
வேந்தன், பிரம்மாவின் அருள் பெற்றுப்
பிறந்தவன்
ஹனுமான் - அஞ்சனை
என்ற தாய்க்கும், கேசரி என்ற தந்தைக்கும்,
வாயு பகவான் அருளால் பிறந்தவன், ஆஞ்சநேயன்,
மாருதி, வாயுகுமாரன் என்பவை அவன் வேறு
பெயர்கள்
ஸ்வயம் பிரபை - குகையில்
வாழ்ந்த தபஸ்வினி, குரங்குப்
படையினருக்கு உணவிட்டவள்