பாலில்
எடுக்கப்படுகின்ற தயிர் முதலிய ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையுடைய மற்றும் குணமுடையன.
இவற்றின் கலவை சிறந்த சத்துணவு. கோசலமும், கோமலமும் மருத்துவக் குணமுடையவை.
பஞ்சகவ்யத்தால்
அபிஷேகம் செய்கின்ற போது கிடைக்கின்ற பயன்கள் வருமாறு….
- பசும்பால்
– ஆரோக்கியம், ஆயுள் விருக்தி
- பசுந்தயிர்
– பாரம்பரிய விருத்தி
- பசும்நெய்
– மோட்சம்
- கோசலம்
– தீட்டு நீக்கம்
- கோமலம்
– கிருமி ஒழிப்பு
பொதுவாக
பாவங்கள் குறைய புண்ணியங்கள் நிறையும். கருவறைகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள
சிலைகள் எப்போதும் குளிர்ச்சியில் இருக்கின்றன. பெரும்பாலான கருவறைகளில் சூரிய
ஒளிகள் புகுந்து படிவதில்லை. எனவே, மிக்கக் குளிர்ச்சி, மிக்க இருட்டின் காரணமாக
கருவறைகள், சிலைகள், இடுக்குகள், பிளவுகள் முதலான இடங்களில் கிருமிகளும்,
பாசிகளும், பூச்சிகளும் வளர்வதற்கு வாய்ப்புகள் அதிகம். அவற்றை அறவே அழிக்கின்ற
ஆற்றல் பஞ்சகவ்யத்திற்கு அதிகமாக உண்டு.
‘புனிதம்’
என்ற ஒரே காரணத்திற்காகப் பஞ்சகவ்யம் ஒரு சிறந்த அபிஷேகப்
பொருளாக மதிக்கப்படுகிறது.
பல
திறம்பட அருமையான பொருள்களால் சிலைகளுக்கு அபிஷேகம் செய்த பிறகு அந்த சிலைகளின்
இயற்கையான நுண்ணிய ஆற்றல் சற்று கூடுதலாகின்றது என்பது அறிவியல் அடிப்படையில்
நிரூபிக்கப்பட்டுள்ளது. பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் செய்த பிறகு அச்சிலைகளின் அற்புத,
அதிசய தெய்கூக ஆற்றல் அதிகமாகின்றது என்பதும் உண்மையாகும்.