திலகம்
நெற்றிக்கு
இட்டுக் கொள்வதை புண்ட்ர தாரணம் என்று ஏன் சொல்கிறோம் ?
புண்ட்ரீகம்
என்றால் தாமரைப் பூ மலர்ந்த தாமரைப் போன்ற அழகிய கண்களை உடைய இறைவனை புண்டரீகாக்ஷன்
என்று வர்ணிக்கிறோம். இதுவேதான் பங்கஜாக்ஷன், அம்புஜாக்ஷன் என்றெல்லாம் கூட ஆகிறது.
ஆதியிலே நெற்றிக்கு
இட்டுக் கொள்வது ஒரு தாமரைப்பூ அல்லது இதழ் மாதிரி தோற்றப் பொலிவுடன் இருந்தது. எனவே
அது “புண்ட்ரீகம்” அல்லது புண்ட்ரம் எனப்பட்டது.
நெற்றியில்
இட்டுக் கொள்வைதை ‘திலகம்’ என்கிறோம். ‘திலக தாரணம்’ என்ற வர்ர்த்தை கூட உள்ளது.
திலம் என்ற
எள்ளு அளவில் இட்டுக் கொள்ளும் புண்ட்ரம் திலகம் ஆகிறது.
இது அலங்காரம்
அதாவது அழகபடுத்திக் கொள்கிற அடையாளம். சாஸ்த்ரோக்தமாக சரீரத்தைப் பரிசுத்தி பண்ணிக்
கொள்வதற்காக நெற்றிக்கு இட்டுக் கொள்ளும் போது முப்பட்டையாக விபூதி தாரணம் பண்ணினார்கள்.
அழகுக்காக,
அலங்காரத்திற்காக அரசர்கள், பெண்கள், நல்ல ஸுகந்தமான சந்தனம், ஜவ்வாது, சாந்து ஆகியவை
தயார் செய்து அதனைப் பல வடிவங்களில் குறிப்பாக தாமரை வடிவத்தில் நெற்றிக்கு இட்டுக்
கொண்டார்கள். இதுவே, ‘திலக தாரணம்’ என்பது.
தற்காலத்தில்
பெண்கள் சொகுசாக அழகிற்காக விதவிதமாக ஸ்டிக்கர் திலகங்களை - பல வடிவங்களில், பல நிறங்களில்
அணிகின்றனர்.
சில செல்வந்தர்
குடும்பப் பெண்கள் ரத்தினக் கற்கள் முதல் குறைந்த விலைக் கற்கள் வரை பலவற்றைக் கொண்டும்
நெற்றியை அலங்கரித்துக் கொள்கிறார்கள்.
மஹாகவி காளிதாசர்
கூட தமது மாளவிகான்னிமித்ரம் என்ற காவியத்தில் பெண்கள் அணியும் திலகங்களைப் பற்றி வர்ணித்துள்ளார்.
பெண்கள் அணியும்
‘திலகம்’ நமது பண்பாட்டையும், மங்கள கரத்தையும் குறிப்பிடுவதோடு மட்டுமல்லாது சில மந்திர
சக்திகளையும் கொண்டதாகும்.
ஒவ்வொரு நிறப்பொட்டும்,
ஒவ்வொரு தன்மையைக் குறிக்கிறது. கறுப்பு சாந்தில் இடும் பொட்டு முகத்திற்கு கலையைக்
கூட்டுகிறது. சிவப்பு நிறத் திலகம் மற்றவர்களை கவரும் தன்மையை அளிக்கிறது. மஞ்சள் நிறம்
செல்வத்தையும், வெண்மை நிறம் மன அமைதியையும் அளிக்கிறது.
மேலும் பொட்டை
இட்டுக் கொள்ளும் விரல்களுக்கும் விஷேசம் உண்டு. ஆன்மீக எண்ணத்துடனும், தெய்வ சிந்தனையுடனும்
இடப்படும் எந்தவொரு திலகமும் மோதிர விரலால் மட்டுமே இடப்படும். ஹோமத்தின் பிரசாதமாக
தரப்படும் ரக்ஷை (கறுப்பு நிற பஸ்மம்) மற்றும் அம்பாள் சந்நிதியில் தரப்படும் குங்குமப்
பிரசாதம் ஆகியவற்றை நெற்றியில் இட்டுக் கொள்ளும் போது அநாமிகா எனப்படும் வலகு கை பவித்ரா
விரலால் மட்டுமே இட்டுக் கொள்ள வேண்டும்.
கட்டை விரலால்
இடப்படும் திலகம் சக்தியை அளிக்கிறது. ஆரத்தியிலிருந்து நெற்றியில் இடும் போது வெற்றித்
திலகமாக வீரர்களை வழி அனுப்ப இந்த விரலே பயன்படுத்தப்படுகிறது.
நாட்டிய நங்கையர்கள்
பலவிதமான கவர்ச்சித் திலகங்களை அணிகின்றனர். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூட நெற்றியில் கஸ்தூரி
திலகமணிந்ததாக கிருஷ்ணகர்ணாம்ருதம் கூறுகிறது.
வடகலை தேன்கலை நாமங்கள்
வைணவர்கள்
பெருமாளின் திருவடியல்லாது உயிர்களுக்கு வேறு கதியில்லை என்பதை உணர்த்த திருமாலின்
திருவடியின் சாயலாய் நாமம் அணிந்தார்கள். திருவடித் தாமரையும் புண்ட்ரம் தானே.
பின்னாளில்
வடகலையினர் தங்களைத் தனித்துக் காட்ட திருவடி வடிவில் இருந்த ஊர்த்வ புண்ட்ரத்தில்
ஒரு சிறு வட்டவளைவை ஏற்படுத்து “யூ” வடிவத்தில் ஆக்கிக் கொண்டார்கள். தென்கலையினர்
கீழே மூக்கின் மேல் ஒரு கோடு இட்டுக் கொண்டார்கள்.
ஊர்த்வ புண்ட்ரத்தின்
இடையே ஸ்ரீதேவியின் சின்னமாக ஸ்ரீ சூர்ணத்தை ஊர்த்வமாக (மேல் நோக்கி) இட்டுக் கொள்வது
என்ற பழக்கம் உண்டாகி, பின் அதிலும் மஞ்சள் நிறத்தில் ஸ்ரீ சூர்ணம், சிவப்பு நிறத்தில்
ஸ்ரீ சூர்ணம் என்றும் இ-ரு பிரிவாகிவிட்டது.